Fri. May 17th, 2024

மதுபோதையில் வந்தவர்களால் நெல்லியடியில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் தாக்குதல்

07.02.2021 நேற்று இரவு பத்து முப்பது மணி அளவில் நெல்லியடி கட்டைவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக  மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் எரிபொருள் பெற்றுக் கொண்டு இருந்தவர்களை விட தங்களுக்கு முதல் தருமாறு எரிபொருள் நிலையத்துக்கு பொறுப்பான முகாமையாளர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

அவர்களுக்கு முன்னுருமை வழங்காததால் முகாமையாளருக்கு கையால் அடித்துள்ளார்கள், பின்னர் முகாமையாளருக்கு  சாராயத்தின் உடனிருந்த போத்தலால் அடித்து மண்டையை உடைத்து விட்டு தப்பி ஓடியுள்ளார்கள். முகாமையாளர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நெற்றிப் பகுதியில் ஆறு தையல்கள் போடப்பட்டு உள்ளது.தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இன்று நெல்லியடி பொலிசார் அவரின் வாக்குமூலத்தை பதிவு செய்து விசாரணை ஆரம்பித்துள்ளார்கள் அவர்கள் அடித்து விட்டு ஓடும் பொழுது ஒரு சோடி செருப்பும் ஹெல்மெட் விட்டுச் சென்றுள்ளார்கள்.அவர்களுடைய மோட்டார் சைக்கிள் இலக்கத்தை எடுத்துள்ளார்கள். தற்போது தீவிர விசாரணை நடைபெறுகிறது.

எரிபொருள் நிலையதத்தில்வேலை செய்பவர்கள் வேலை நிறுத்தம் செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளார்கள்.

நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு முன்புறமாகவே இந்த எரிபொருள் நிரப்பும் நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்