மதியாமடு பகுதியில் கிணற்றில் இருந்து பெருமளவான வெடிபொருட்கள் மீட்பு
வவுனியா வடக்கு கட்டையர்குளம் மதியாமடு பகுதியில் கிணற்றில் இருந்து பெருமளவான வெடிபொருட்களை புளியங்குளம் பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் தனியார் காணிஒன்றில் அமைந்துள்ள கிணறுஒன்றை அதன் உரிமையாளர் இன்று துப்புரவு செய்துள்ளார்.
இதன்போது கிணற்றில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த நிலையில்,புளியங்குளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் கிணற்றிலிருந்து 8 மோட்டார் செல்லினை முதற்கட்டமாக மீட்டிருந்தனர். இது தொடர்பாக இராணுவ புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.