Wed. May 15th, 2024

மணல் கொள்ளையர்களின் தாக்குதலில் 4 பொலிஸார் காயம், இருவர் கைது

அரியாலை பகுதியில் இன்று அதிகாலை மணல் கொள்ளையர்களின் தாக்குதலில் 4 பொலிஸார் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இன்று அதிகாலை 2 மணியளவில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க முயன்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி விட்டு மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தப்பியோட முற்பட்டுள்ளார்கள்.
இந்த சம்பவத்தில் 4 பொலிஸார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருவதுடன் தப்பியோடியவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டுள்ளார்கள்

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்