Fri. May 17th, 2024

மகளிருக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் நாகர்கோவில் வெண்மதி விளையாட்டுக்கழகம் வெற்றி

 

மருதங்கேணி பிரதேச செயலக 2020 ஆம் ஆண்டுக்கான பிரதேச விளையாட்டு விழாவில் மகளிருக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் நாகர்கோவில் வெண்மதி விளையாட்டுக்கழகம் 13 மேலதிக கோல்களினால் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

மருதங்கேணி பிரதேச செயலகப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான 2020 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விழா நிகழ்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மகளிர் பிரிவுக்கான வலைப்பந்தாட்டப் போட்டி நேற்று சனிக்கிழமை(29) மருதங்கேணி பொதுவிளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் நாகர்கோவில் வெண்மதி விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து வத்திராயன் செல்வா விளையாட்டுக் கழக அணி மோதியது.

இதில் நாகர்கோவில் வெண்மதி விளையாட்டுக்கழக வீராங்கனை ஜெ.சுகன்யா 14 கோல்களை போட வத்திராயன் செல்வா விளையாட்டுக்கழக அணி ஒரு கோலை மட்டுமே போட்டது.

இதில் 13 மேலதிக கோல்களினைப் போட்டு நாகர்கோவில் வெண்மதி விளையாட்டுக்கழக அணி வலைப்பந்தாட்ட போட்டியில் முதலாம் இடத்தினை பெற்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்