Sat. May 18th, 2024

போாில் தந்தை காணாமல்போன நிலையில், ஒரு கையை இழந்த தாயின் அரவணைப்பில் சாதித்த முல்லைத்தீவு மாணவி! குவியும் பாராட்டு.

இறுதிப்போாில் தந்தை காணாமல்போன நிலையில், ஒரு கையை இழந்த தாயின் அரவணைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் ரவிச்சந்திரன் யாழினி என்ற மாணவி க.பொ.த உயா்தர பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1ம் இடம்பெற்று சாதித்துள்ளாா்.

நேற்று பிற்பகல்  வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் அ  பகுதியை சேர்ந்த புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவிச்சந்திரன் யாழினி வணிகத்துறையில் மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தனது தந்தையை தொலைத்து காணாமல் போனவர்கள் பட்டியலில் தந்தையை தேடிக்கொண்டிருக்கும் குறித்த மாணவி ஒரு கையை இழந்த தன்னுடைய தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் நிலையில்

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வணிகத்துறையில் மாவட்ட ரீதியில் முதலாமிடம் பெற்று சாதித்துள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில் இவருடைய தாயாரையும் பாராட்டி வருகின்றனர்.

வறுமையிலும் கணவர் காணாமல் போயுள்ள நிலையிலும் தனது இரண்டு பிள்ளைகளையும் கல்வியில் முன்னேற்றுவதற்காக உழைக்கிறார் இந்த தாய்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்