Fri. May 17th, 2024

பெண்களிற்கான கிரிக்கெட் சம்பியனாகியது சங்கானை

யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான பெண்களிற்கான கிரிக்கெட்டில் சங்கானை பிரதேச செயலக அணி சம்பியனாகியது.
இதன் இறுதியாட்டம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வட்டுக்கோட்டை வை.எம்.எச்.ஏ. மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் சங்கானை பிரதேச செயலக அணியை எதிர்த்து தெல்லிப்பளை பிரதேச செயலக அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தெல்லிப்பளை பிரதேச செயலக அணி 4 விக்கெட்டுகளை இழந்து 36 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சங்கானை பிரதேச செயலக அணி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 37 ஓட்டங்களைப் பெற்றுச் சம்பியனாகியது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்