Tue. May 14th, 2024

பாரபட்ஷம் காட்டப்படும் செல்வாபுரம் கிராமமக்கள்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் கரணவாய் செல்வபுரம் கிராமத்துக்கு பிரதேச சபையினால் ஒதுக்கப்படும் நிதியில் செல்வபுரம் கிராமத்தில்  உள்ள வீதிகளுக்கு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுகின்றார்.செல்வபுரம் முன்பள்ளி வீதி செல்வபுரம் வீதி செல்வா புற உள்வீதி வீரபத்திர வீதி ஆகியன புனரமைக்கபடாமல் காலகாலமாக இருக்கின்றது. கரணவாய்க்கு உட்பட்ட பிரதேசபை உறுப்பினர் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையினால் ஒதுக்கப்படும் நிதியை தனது ஊரிலும் தனக்கு விருப்பமானவர்கள் இருக்கும் இடங்களுக்கும் பயன்படுத்துகின்றார். அவருடன் போட்டியிட்ட தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் அவருக்கு எதிராக அதிகமான வாக்குகளை பெற்றிருந்தார். அந்தப் பெண் உறுப்பினர் தற்போது போனஸ் பட்டியலில் பிரதேச சபையின் உறுப்பினராக இருக்கின்றார் அவர் தனது ஊரில் உள்ள வீதிகள் அயல் கிராமத்தில் உள்ள வீதிகளுக்கு  நிதி ஒதுக்குமாறு கேட்கும்பொழுது போனஸ் வந்தவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாதென தெரிவித்திருக்கிறார்கள். அதற்கு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் உப தவிசாளர் செயலாளர் ஆதரவாக இருக்கிறார்கள். செல்வபுரம் கிராமத்திற்கு கம்பரெலியா  திட்டத்தில் எவ்விதமான வீதிகளும் ஒதுக்கப்படவில்லை. அங்கயன் இராமநாதன் ஒதுக்கப்பட்ட நிதியில் போடப்பட்ட வீதியும் அரைகுறையான நிலையில் இருக்கின்றது. பிரதேச சபை உறுப்பினர்களால் இக்கிராமத்திற்கு செய்யமுடியாத  வேலைத்திட்டத்தை நேரடியாக நீங்கள் பார்வையிட்டு இவ் விதிகளை புணர்நிர்மானம் செய்து தருமாறு செல்வபுரம் மக்கள் தவிசாளரிடம் கோரிக்கை விடுகிறார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்