Fri. May 17th, 2024

பாடசாலை போக்குவரத்து சேவை வாகனங்களுக்கான அறிவுறுத்தல்

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளைத் தவிர நாட்டின் அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் 06 – 13 ஆம் வகுப்புகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனங்கள் முறையான சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை கடைபிடிக்க வேண்டும் என்று பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
போக்குவரத்து பொலிஸார் இவ்வாறான சேவையில் ஈடுபடும் வாகனங்களின் நடமாட்டத்தை கண்காணிப்பார்கள் என்றும் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்