Sat. May 18th, 2024

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சயிட் அப்ரிடி தனக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளானார்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சயிட் அப்ரிடி தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்றும் தான் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சயிட் அப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,கடந்த வியாழக்கிழமை முதல் நான் சுகயீனம் அடைந்துள்ளேன். எனது உடல் வலி அதிகரித்துள்ளது. நான் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டேன். எதிர்பாராத நிலையில் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நான் விரைவில் குணமடைய பிரார்த்தனைசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்
40 வயதான அப்ரிடி, கொரோனா தொற்றுக்குள்ளாகிய இரண்டாவது பாகிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆவார். தவ்பீக் உமர் சில நாட்களுக்கு முன்பு கோரோனோ தொற்றுக்கு உள்ளாகி இருந்ததாக அறிவித்திருந்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்