Mon. May 13th, 2024

பலத்த போராட்டத்தில் கரணவாய் மத்தி அணி இரண்டாம் சுற்றுக்கு முன்னேற்றம்

வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் உதைபந்தாட்ட போட்டியில் கரணவாய் மத்தி அணி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
வல்வை தீருவில் விளையாட்டு கழக மைதானத்தில் நேற்று புதன்கிழமை  நடைபெற்ற ஆட்டத்தில் கரணவாய் மத்தி அணியை எதிர்த்து அல்வாய் நக்கீரன் அணி மோதியது.
இடைவேளைக்கு முன்னரான ஆட்டத்தில் அல்வாய் நக்கீரன் அணி வீரர் விபூசன் ஒரு கோலைப் போட கரணவாய் மத்தி அணி வீரர் சிவதர்சன் ஒரு கோலைப் போட்டு பதிலடி கொடுத்தார். இதனால் இடைவேளைக்கு முன்னரான ஆட்டத்தில் இரு அணிகளும் சமநிலை வகித்தனர். இடைவேளைக்கு பின்னரான ஆட்டத்தில் இரு அணிகளும் மீண்டும் தமது பலப்பரீட்சையை நடாத்தினர். இதிலும் நக்கீரன் அணி வீரர் திபேந்திரா ஒரு கோலைப் போட அதற்கும் கரணவாய் மத்தி அணி வீரர் சிவதர்சன் ஒரு கோலைப் போட்டு ஆட்டத்தை சமநிலைப்படுத்தினர். இதனால் சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் கரணவாய் மத்தி அணி வீரர் 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்