Sun. May 19th, 2024

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு பொறுப்புள்ள வைத்திய அதிகாரியை நியமிக்க கோரிக்கை

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நிரந்தர பொறுப்பு வைத்திய அதிகாரி ஒருவரை நியமனம் செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.  இந்த வைத்தியசாலையில்  ஏற்கனவே கடமையாற்றிய பொறுப்பதிகாரி சில குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது. அவர்  தற்காலிகமாக இடமாற்றம் பெற்று உள்ள நிலையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது .  தற்பொழுது வைத்தியசாலையில் நோயாளிகளின் தேவைகளை சரிவர பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

தற்பொழுது தாற்காலிகமாக நியமிக்க பாடுள்ளவருக்கு நிரந்தர அதிகாரியவதற்கு தகைமைகள் இல்லாமையாலும் அவர் செயல்பாட்டுதிறன் இல்லாவதராகவும் இருப்பதாகவும் ஊழியர்கள் முதல் நோயாளிகள் வரை அதிருப்தி அடைந்துள்ளார்கள்.

மேலும் அவர் வைத்தியசாலை உள் விவகாரங்கள் குறித்தும் நோயாளிகள் குறித்தும் அக்கறையில்லாமல் இருப்பதுடன் வெளி அலுவல்களில் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால்  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நிரந்தர பொறுப்பதிகாரி ஒருவரை நியமிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்