பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் குகதாஸன் தற்காலிக இடைநிறுத்தம், விசாரணைக்கு உத்தரவு
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் குகதாஸனை உடனடியாக தற்காலிகமாக இடை நிறுத்தி விசாரணைக்கு உட்படுத்துமாறு மத்திய சுகாதார அமைச்சு மாகாண சுகாதார சேவை பணிமனைக்கு அவசர அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளது.
குறித்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், அரச மருத்துவர்கள் சங்கத்தினைச் சேர்ந்த வைத்தியர் காண்டீபன் ஆகியோர் உறுதிப்படுத்தினர்.
நாளை இடம்பெறவிருந்த பணிப் புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.