Mon. May 20th, 2024

பயிற்சியாளரின் சாதனை மாணவனால் முறியடிப்பு

பயிற்சியாளரின் சாதனையை அவரின் மாணவனால் முறியடிக்கப்பட்டு புதிய சாதனையை பதிவு செய்து பயிற்சியாளருக்கு பெருமை தேடிக் கொடுத்த நிகழ்வு நேற்று  யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
மாவட்டங்களுக்கு இடையிலான வடமாகாண  ஆண்கள் பெண்களிற்கான தடகளத் தொடர் யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் ஆண்களிற்கான குண்டு போடுதல் போட்டியில் யாழ் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த சிவகுமார் பிரகாஷ்ராஜ் 40.35 மீற்ரர் தூரம் எறிந்து புதிய சாதனையை பதிவு செய்து தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றினர். 2012ம் ஆண்டு இவரின் பயிற்றுநர் வ.ஹரிகரன் 39.13 மீற்ரர் எறிந்த தூரத்தையே முறியடித்தமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்