பட்டம் விட சென்ற சிறுவன் கிணற்றில் விழுந்து பரிதாபமாக பலி
பருத்தித்துறை இன்பசிட்டி பகுதியில் இன்று வியாழக்கிழமை (12) பிற்பகல் பட்டம் விடச் சென்ற சிறுவன் ஒருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்ததாக பருத்தித்துறை பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் இன்பசிட்டி பருத்தித்துறையைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனான ஜெகன் ஆனந் என பொலிசார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.