நெல்லியடி வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் பல்நோக்கு கூட்டுறவு சங்க நிவாரணத்துக்காக பணம் ஏற்பாடு
16.04.2020.நாளாந்தம் வருமானத்தை இழந்தவர்களுக்கும் சமுர்த்தி பயனாளிகளுக்கும் அரசினால் பலநோக்கு கூட்டுறவு சங்கங்களினூடாக வழங்க பணிக்கப்பட்டு உள்ள நிவாரண பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மேலதிகமாக தேவைப்படும் அவசர நிதி நெருக்கடி சமாளிப்பதற்காக நெல்லியடி வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் பெயர் குறிப்பிட விரும்பாத வர்த்தகர் ஒருவர் 1 மில்லியன் ரூபாவை கட்டை வேலி நெல்லியடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு வழங்கியுள்ளார். இதனை வட்டியில்லா கடனாக அவர் வழங்கியுள்ளது குறிபிடத்தக்கது.