நெல்லியடியில் அடிக்கடி இடம்பெறும் விபத்து
நெல்லியடி நகரப்பகுதியில் அமைந்துள்ள சிக்னல்விளக்குக்கு அருகாமையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றது. நேற்று இரவு 7 மணி அளவில் பருத்தித்துறை பக்கத்தில் இருந்து வந்த கூலர் வாகனமும் அதே பகுதியில் பக்கம் இருந்து வந்த டிப்பர் வாகனமும் விபத்துக்குள்ளாகியுள்ளது. அப்பகுதியில் வீதிப் போக்குவரத்து போலீசார் நின்றும் வாகன சாரதிகளின் கவனமின்மையினால் விபத்துக்கள் ஏற்படுகின்றது. இன்று கூலர் வாகனத்தின் உடைய கண்ணாடிகள் நொறுங்குபட்டு முன்பக்கமும் சேதமடைந்துள்ளது.