நிபந்தனையுடன் சிகையலங்காரங்கள் திறக்க நடவடிக்கை
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட சிகையலங்கார நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்களை சுகாதார பாதுகாப்பு நடைமுறையின் கீழ் மீளவும் திறக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆலோசனை வழங்கியுள்ளார்.
அழகுக்கலை துறையின் நிபுணர்களின் பங்கேற்புடன் நேற்று மாலை சுகாதார அமைச்சில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இதிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.