Fri. May 17th, 2024

நாவற்குழியில் கத்திக்குத்து சிறுமி ஒருவர் படுகாயம்

நாவற்குழி 300 வீட்டுத்திட்ட பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் சிறுமி ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.  அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற விசேட நிகழ்வு ஒன்றின்போது உறவினர்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தகராரின்  போது குறுக்கே சென்ற சிறுமி இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்