நாளை வியாழக்கிழமையும்(02) நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையும் ஓய்வூதிய கொடுப்பனவு
அரச ஓய்வூதியங்கள் பெற்றுக் கொள்வோருக்கு நாளை வியாழக்கிழமையும்(02) நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையும் (03) ஓய்வூதியக் கொடுப்பனவுகள் வழங்கி வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்படி தினங்களில் ஓய்வூதியம் பெற்றுக் கொள்ள முடியாதவர்கள் எதிர்வரும்-06 ஆம் திகதி ஓய்வூதியம் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வங்கிகள் ஊடாக ஓய்வூதியம் பெற்றுக் கொள்வோரின் பணம் ஏற்புடைய வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.
இந்நிலையில் யாழில் வங்கிகள் ஊடாக ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளும் ஓய்வூதியர்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தொடர் ஊரடங்குச் சட்டத்தால் ஏற்பட்டுள்ள போக்குவரத்துச் சிரமத்தைத் தவிர்க்கும் வகையில் அரசாங்கத்தினால் போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய யாழ்.குடாநாட்டின் பல்வேறு கிராம சேவகர் பிரிவுகளையும் சேர்ந்த ஓய்வூதியர்களை ஏற்புடைய வங்கிகளுக்கு அழைத்துச் செல்வதற்காக நாளை காலை குறிப்பிட்ட இடங்களில் ஒன்றுகூடுமாறு கிராம சேவகர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலதிக தகவல்களுக்கு உங்கள் கிராமசேகவரை தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது