Sat. Jul 6th, 2024

நாளை வடமாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை, பரீட்சை, புதிய நியமனம் தொடர்பான ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்

நாளை திங்கட்கிழமை வடக்கு மாகாண பாடசாலைகளும் நடைபெற மாட்டாது என வடமாகாண கல்வி பணிப்பாளர் தி. ஜோண் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக நாளை(03/06/2024) நாடளாவ ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இதனையடுத்தே அவர் இவ்வறித்தலை விடுத்துள்ளார்.
அத்துடன் நாளைய தினம் புதிதாக கடமையைப் பொறுப்பேற்க உள்ள ஆசிரியர்கள் நாளை மறுதினம் தமது கடமைகளை பொறுப்பேற்குமாறும் அறிவித்துள்ளார். மேலும் நாளை நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதுடன், குறித்த பரீட்சை தொடர்பான திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்