நாட்டில் கோரோனோ தொற்றுக்குள்ளானோர் தொகை 477 ஆக உயர்வு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 6 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதன்படி நாட்டில் தொற்றுக்குள்ளானோர் 477 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கடற்படையினர் 95 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று மொத்தமாக இனங்காணப்பட்டுள்ளது. இதில் 68 வெலிசறை கடற்படை முகாமிலும் 27 விடுமுறையில் சென்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளார்கள்.