Fri. May 17th, 2024

நவம்பர் 10 முதல் யாழ் -சென்னை மற்றும் யாழ் -திருச்சி விமான சேவைகள்

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் (JAF ) மற்றும் சென்னை சர்வதேச விமான நிலையம் (MAA ) இடையே வர்த்தக விமான சேவைகள் நவம்பர் 10 முதல் தொடங்கப்படும் என்று இலங்கை சிவில் விமான போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் வழங்கிய குறிப்பிட்ட நேர அட்டவணையின்படி விமான சேவை தொடங்கப்படும் என்று விமான போக்குவரத்து சபை தலைவர் ஜெனரல் எச்.எம்.சி நிமல்சிரி தெரிவித்தார்

அதன்படி இரு விமான நிலையங்களுக்கும் இடையே தினசரி விமான சேவை இயக்கப்படும் என்றும் அவர் கூறினார்

“யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையிலான டிக்கெட் கட்டணம் ஒரு வழி டிக்கெட்டுக்கு ரூ .15, 690 ஆக இருக்கும் என்றும் அறிவிக்கப்படுள்ளது

இதற்கிடையில், இலங்கை உள்நாட்டு விமான நிறுவனமான ஃபிட்ஸ் ஏவியேஷன்
பிரைவேட் லிமிடெட், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியாவின் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் (TRZ ) ஆகியவற்றுக்கு இடையே நவம்பர் 10 முதல் வாரத்திற்கு மூன்று விமான சேவைகளை இயக்குவதாக அறிவித்துள்ளது

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை 32 முதல் 50 நிமிடங்கள் வரை எடுக்கும் என்று தெரியவருகிறது

டிக்கெட் முன்பதிவு முகவர் மூலம் அல்லது விமானங்களின் அந்தந்த வலைத்தளங்களிலிருந்து மக்கள் தங்கள் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்