தேசிய மட்ட ஸ்ராண்டற் சையிக்கிள் ஓட்டத்தில் வடமாகாண அணியினர் சம்பியன்
![](https://newsthamil.com/wp-content/uploads/2024/06/FB_IMG_1718634128491.jpg)
தேசிய மட்ட ஸ்ராண்டற் சையிக்கிள் ஓட்டத்தில் வடமாகாண அணியினர் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
தேசிய மட்ட பெண்களுக்கான 80 கிலோ மீட்டர் கொண்ட ஸ்ராண்டற் சையிக்கிள் ஓட்ட போட்டிகள் பதுளை மையங்கனையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
![](https://newsthamil.com/wp-content/uploads/2024/06/FB_IMG_1718634124125-300x175.jpg)
இதில் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்த யாழ் மாவட்ட வீராங்கனைகளான பி.தனுசுயந்தினி, ஜெ.தர்மிலாரஷி, எஸ்.ரெஜீனா ஆகியோரும் முல்லைத்தீவு மாவட்ட வீராங்கனை என்.ராதிகா ஆகியோரும் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்து சாதனை படைத்துள்ளனர்.