தேசிய மட்ட தடகளத் தொடர் நிறைவில் வடமாகாணம் 6ம் இடத்தை தக்க வைத்தது
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தடகளத் தொடரில் இறுதி நாள் முடிவில் வடமாகாணம் கடந்த ஆண்டைப் போல் இவ்வாண்டும் 6ம் இடத்தை தக்க வைத்தது.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தடகளத் தொடர் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் கடந்த புதன்கிழமை முதல் இன்று வரை நடைபெற்றது.
இன்றைய இறுதி நாள் நிறைவில் வடமாகாணம் 156 புள்ளிகளுடன் கடந்த ஆண்டைப் போல் இவ்வாண்டும் 6ம் இடத்தில் உள்ளது.
இறுதி புள்ளிகளின் அடிப்படையில்
மேல் மாகாணம் 1280புள்ளிகளுடன் முதலாமிடத்திலும், வடமேல் மாகாணம் 501புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், மத்திய மாகாணம் 437புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும், தென் மாகாணம் 327
புள்ளிகளுடன் நான்காமிடத்திலும், சப்பிரகமுவ மாகாணம் 278 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்திலும், வடமாகாணம் 156 புள்ளிகளுடன் ஆறாமிடத்திலும், வட மத்திய மாகாணம் 107 புள்ளிகளுடன் ஏழாம் இடத்திலும், ஊவா மாகாணம் 98 புள்ளிகளுடன் எட்டாம் இடத்திலும், கிழக்கு மாகாணம் 78புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும் உள்ளன