Fri. May 17th, 2024

தேசிய மட்ட உதைபந்தாட்ட போட்டியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி சம்பியன்

தேசிய மட்ட உதைபந்தாட்ட போட்டியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி சம்பியனாகியது.
இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய  14 வயது பெண்கள் அணிகளுக்கு இடையே சமபோஷா வெற்றிக்கிண்ணத்திற்காக உதைபந்தாட்ட போட்டியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி மகாஜனக் கல்லூரி அணி சம்பியனாகியது.
இதன் இன்று (11.03.2020) கொழும்பு றேஸ் ஹோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில்
தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணியை எதிர்த்து பொலனறுவை பந்திவெவ மகா வித்தியாலய அணி மோதியது.
இடைவேளைக்கு முன்னரான ஆட்டத்தில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடாத்திய போதும் 14வது நிமிடத்தில் பொலனறுவை பந்திவெவ மகா வித்தியாலய அணி வீராங்கனை ஒரு கோலைப் போட இடைவேளைக்கு முன்னர் பந்திவெவ வித்தியாலய அணி 1:0 என்ற கோல் கணக்கில்  முன்னிலை வகித்தது. இடைவேளைக்குப் பின்னர் ஆட்டம் ஆரம்பித்ததும் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடினர். 8வது நிமிடத்தில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி வீராங்கனை லயன்சிகா மிகச் சிறப்பான கோலைப் போட்டு கோல்களின் எண்ணிக்கையை சமநிலைப்படுத்தினார். அதன் பின்னர் இரு அணிகளும் பலமுறை முயற்சித்த போதும் கோல் எதனையும் போட முடியவில்லை. இதனால் சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்