துப்பாக்கி பிரயோகம் இருவர் காயம்
ஊரடங்கு காலத்தில் காவல்துறையினரின் ஆணையை மீறி வெளியில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று மொறட்டுவை – எகோட வுயன பகுதியில் நடைபெற்றது.
ஊரடங்கு வேளையில் காவல்துறையினரின் ஆணையை மீறி பயணித்த வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டதாகவும் இதில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலீஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.