Sun. May 19th, 2024

அல்வாய் வடக்கில் வீடு புகுந்து தாக்குதல் 7 பேர் மருத்துவ மனையில்

அல்வாய் வடக்குப் பகுதியில் ஒருவரின் வீடு புகுந்து அடிதடி 7 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் நேற்று தீபாவளி தினத்தன்று அல்வாய் வடக்கு நக்கீரன் குச்சம் வைரகோவிலடி பகுதியில் செ.அசோக்குமார் மற்றும் றதீஸ்குமார்  வீட்டுகளிலேயே நேற்று முன்தினம் பிற்பகல் 6.45 மணியளவில்  நடைபெற்றது. சம்பவத்தில் குறித்த வீடுகளின் உரிமையாளர்களின் உறவினர்களே காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதில்  அசோக்குமார் (வயது 45), யதுர்சன் (வயது 22), தஸ்மிகன் (வயது 19), கோபிசாப்தன் (வயது 17), ரதீஸ்குமார் (வயது 46), ஜானுசன் (வயது 20), சங்நீத் (வயது 24) ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, நக்கீரன் குச்சம் வைரகோவிலடி பகுதியில் சிலர் மதுபோதையில் ஈடுபட்டதாகவும் இது தொடர்பாக அசோக்குமார் கேட்ட போது இளைஞர்களுக்கும் இவருக்கும் வாய்த்தர்கம் கைகலப்பாக மாறியது. இதில் அசோக்குமார் மற்றும் றதீஸ்குமார் ஆகியோரின்  வீட்டுக் கதவு, தளபாடங்கள் மற்றும் வாழைமரங்கள் என்பன சேதமாக்கப்பட்டதுடன் அவரின் உறவினர்கள் 7 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  இது தொடர்பாக பருத்தித்துறை பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்