தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் , நள்ளிரவு 12 முதல் அதிகாலை 4 மணி மட்டுமே
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை (14) முதல் மேலதிக அறிவிப்பு வரும் வரை தினமும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மட்டுமே ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கோவிட் -19 பரவுவதைத் தடுக்க சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்த வழிகாட்டுதல்கள் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் கடைகள் மற்றும் பொதுப் போக்குவரத்தின் போது கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்படுள்ளது .