தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கும் பணிகள் ஆரம்பம்!!
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அனைவரும் தமது வாக்கு உரிமையை பயன்படுத்திக் கொள்வதற்காக தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, வாகன சாரதி அனுமதிப்பத்திரம், முதியோர் அடையாள அட்டை, ஓய்வு பெற்ற அல்லது மதகுருமார்களுக்கான அடையாள அட்டைகள் இல்லாத நபர்கள் மேற்படி தற்காலிக அடையாள அட்டைகளை பெற்றுக்கொண்டு வாக்களிக்க முடியுமென தேர்தல்களல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதம் 9ஆம் திகதிக்கு முன் கிராம சேவகரை சந்திப்பதன் மூலம் குறித்த தற்காலிக அடையாள அட்டைக்கு தேவையான ஆவணங்களை சமர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.