தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்களை கைது செய்ய நடவடிக்கை
ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்களை கைது செய்வதற்கு சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்
அதன்படி தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்காரணமாக ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் போன்று ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட காலப்பகுதியிலும் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்வதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.