Thu. May 16th, 2024

சோதனை நடவடிக்கை நிறுத்தம்..! ஸ்கானா் இயந்திரங்களை பொருத்த நடவடிக்கை..

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் பொலிஸாாின் சோதனை நடவடிக்கைகளை நிறுத்தி ஸ்கானா் இயந்திரங்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் கூறியுள்ளாா். இன்றைய தினம் ஆளுநா் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பிலேயே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.

இதன்போது மேலும் அவா் கூறுகையில்,  பாதுகாப்பு ஒழுங்குகள் எப்போதும் மக்களுடைய சுதந்திரத்தை பறிப்பதாகவே அமையும். இந்நிலையில் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு

வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பும் அவ்வாறானதேன. அதனை மக்களும் ஆலய நிா்வாகமும் முழு மனதுடன்  ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

ஆளுநாினால் வழிப்படுத்தப்படும் வடக்கு மாகாண சபை ஊடாக 4 ஸ்கானா் இயந்திரங்களை குத்தகைக்கு பெற தீா்மானித்துள்ளோம். இதன் ஊடாக பக்தா்களை நிறுத்தி சோதனை செய்யவேண்டிய இல்லை.

ஸ்கானா் இயந்திரம்(வெடிபொருட்கள், உலோக பொருட்களை கண்டறியும் கருவி) ஊடாக அனுப்பினால் போது மானதாக இருக்கும்.

இதற்கடையில் வேறு சிலரும் அவ்வாறு இயந்திரத்தை பொருத்த முயற்சிப்பதாக அறிகிறோம்.  அது நல்லது. எவ்வளவு தேவையோஅதனை நாங்களும் பெற்றுக் கொடுக்கலாம்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்