சேர் ஜோன் ஹாபட் தடகள போட்டியில் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி மாணவிக்கு வெண்கலம்
![](https://newsthamil.com/wp-content/uploads/2024/06/IMG-20240613-WA0017-1024x1098.jpg)
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான சேர் ஜோன் ஹாபட் தடகள போட்டியில் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி மாணவி வெண்கல பதக்கத்தை கைப்பற்றி பாடசாலை சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான சேர் ஜோன் ஹாபட் தடகள போட்டிகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற 13 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான குண்டு போடுதல் போட்டியில் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி மாணவி ரி.திலக்சிகா வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.