Thu. May 16th, 2024

சுற்றுலா சென்ற இலங்கை தமிழரை சுட்டுக் கொன்ற மலேசியா பொலிஸ்!! -மனைவியும் கடத்தல்-

இலங்கையை சேர்ந்த பிரித்தானிய பிரஜை மலேசியாவில் காவல்துறையினரால் துரத்தித் துரத்தி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் கொலை செய்யப்பட்ட சில மணித்தியாலங்களில் அவருடைய மனைவியும் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார்.

இச் சமப்வங்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவரது குடும்பத்தவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிரித்தானிய பிரஜையான ஜனார்த்தனம் விஜயரட்ணம் (வயது 40) என்பவர் 14 ம் திகதி மலேசியாவில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவர் பயணம் செய்துகொண்டிருந்த காரை மலேசிய காவல்துறையினர் துரத்திச்சென்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவேளை ஜனார்த்தனனும் அவரது உறவினரும் மலேசிய பிரஜையொருவரும் கொல்லப்பட்டனர்.

ஜனார்த்தனன் தனது மனைவி குழந்தைகளுடன் மலேசியாவிற்கு சுற்றுலா சென்றிருந்தவேளையே இந்த சம்பவம் இடம்பெற்றது. இதேவேளை அவரது மனைவி காணாமல்போயுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்