சிவனொளிபாத மலைக்கு போதை பொருட்களுடன் யாத்திரை! 27 போ் கைது.
சிவனொளிபாத மலைக்கு போதை பொருட்களுடன் யாத்திரை சென்ற 27 போ் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸாா் கூறியிருக்கின்றனா்.
கஞ்சா, ஹெரோயின் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் வைத்திருந்த குற்றத்தின் பேரில் மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நல்லதண்ணிய காவல்துறையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறு கஞ்சா போதைப்பொருளை எடுத்துச் சென்ற 8 சந்தேக நபர்களுக்கு ரூ. 21,500 அபராதத் தொகை அறவிடப்படுவதாக ஹட்டன் நீதவான் ஜெயராம் ட்ரோஸ்கி உத்தரவிட்டுள்ளார்.
ஏனைய சந்தேக நபர்கள் மேற்படி நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி
மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.