சிறைக்காவலர்களுக்கு டிமிக்கு குடுத்த கைதி!! -கண்முன்னே தப்பி ஓடினார்-
மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை பண்ணை வேலைக்காக அழைத்தச் சென்ற வேளை அவர் தப்பி ஓடியுள்ளார்.
அக்கரைப்பற்று, ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய முகமட் ஸ்மையில் என்பவரே இவ்வாறு தப்பி ஓடியவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சிறு குற்றம் ஒன்றுக்காக நீதிமன்றத்தால் 3 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை மட்டக்களப்பு திருப்பெருந்துறை பகுதியிலுள்ள பண்ணையொன்றில் வேலைக்காக கைதிகளை கொண்டுசென்ற வேளையில் குறித்த கைதி அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.