Tue. May 14th, 2024

சிறுவர்களை அரசியலில் ஈடுபடுத்த வேண்டாம்- தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை !

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.அதில் சிறுவர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டாம் என்று அனைத்து அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் உள்ளிட்ட தரப்பினர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.

பொது மக்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு வழங்கிய தகவலை மையமாக கொண்டே இவ் அறிக்கை வெ ளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் சிறுவர்கள் பல்வேறு செயற்பாடுகளின் ஊடாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

1929 என்ற சிறுவர் உதவி தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது எழுத்து மூலம் அல்லது தொலைநகல் மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமாயின் அது தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறும் அதிகாரசபை அறிவித்துள்ளது.

முகவரி :- தலைவர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, இலக்கம் 330, தலவத்துக்கொட வீதி, மாதி வெல

தொலைநகல் :- 0112 778 815

மின்னஞ்சல் :- investigation@childprotection.gov.lk

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்