Thu. May 16th, 2024

சமூக ஊடகங்களில் அரசு அதிகாரிகளை விமர்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை

பதில் ஐ.ஜி.பி சி.டி. விக்கிரமரத்னா, அரசாங்க அதிகாரிகளை விமர்சித்து, அவர்களது கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சி.ஐ.டி மற்றும் அனைத்து போலீஸ் ஓ.ஐ.சி கும் வேண்டுகோள் விடுத்துள்ளார் .

கொரோனா வைரஸ் நாட்டில் பரவாமல் தடுக்க அதிகாரிகளும், அரசுத் துறையின் தொழிலாளர்களும் கடுமையாக உழைத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இருப்பினும், சில நபர்கள் அரசாங்க அதிகாரிகளின் கடமைகளை விமர்சித்து சமூக ஊடகங்களில் பல இடுகைகளையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். இந்த விமர்சனங்கள், கேலிகள் அரசாங்க அதிகாரிகள் தங்களது கடமைகளை செய்யவிடாது தடுக்கின்றன.

அத்தகைய நபர்களைக் கைது செய்து நீதிமன்றங்களில் ஆஜர்படுத்துமாறு குற்றவியல் புலனாய்வுத் துறை மற்றும் அனைத்து பொலிஸ் ஓ.ஐ.சிக்களுக்கும் செயல் ஐ.ஜி.பி அறிவுறுத்தியது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்