சஜித் அரசாங்கத்தில் முதல் முறை பிரதமராகவுள்ள ஒருவர் -சஜித் அறிவிப்பு
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசா, முதல் முறை பிரதமராக பதவி வகிக்கும் ஒருவரையே பிரதராக நியமிப்பார் என்று தெரிவித்தார்
சஜித் பிரேமதாச நேற்று வெளியிட்ட ஒரு சிறப்பு அறிக்கையிலேயே இதனை தெரிவித்தார். நாட்டில் நிலவும் ஊழல் நிறைந்த அரசியல் அமைப்புக்கு பதிலாக, புதிய, சுத்தமான மற்றும் திறமையான அரசியல் கலாச்சாரத்தை நிறுவஉள்ளதாகவும் சஜித் தெரிவித்தார்
ஊழல் மற்றும் மோசடிகளின் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அரசியல்வாதிகளை அவர் உருவாக்க இருக்கும் புதிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை வகிக்க அனுமதிக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் நான் விரைவில் ஒரு சுதந்திரமான, நியாயமான தேர்தலுக்கு அழைப்பு விடுத்து புதிய நிலையான அரசாங்கத்தை அமைப்பேன் என்றும் பிரேமதாச தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சஜித் ஜனாதிபதியானால் தானே பிரதமர் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது