சஜித்தின் பிரச்சார அலுவலகம் மீது கழிவு எண்ணெய் தாக்குதல்!!
சஜித்தின் தேர்தல் பிரச்சார அலுவலகம் மீது இனந்தெரியாத நபர்கள் கழிவு எண்ணெய் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
கட்டுவன பிரதேசத்தில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் கட்சி காரியாலயத்தின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை இரவு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அக்கட்சி காரியாலயத்தில் இருந்து புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் சுவரொட்டிகள் தொகைக்கு இவ்வாறு கழிவு எண்ணெய் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடுவன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.