கோஷ்டி மோதல் துன்னாலையில் சம்பவம், 3 பேர் படுகாயம்
துன்னாலை பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் சம்பவம் ஒன்றில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் சனிக்கிழமை நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு பகுதியினக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் துன்னாலை தெற்கை சேர்ந்தவர்களான தங்கவேல் தங்கேவரன் 31 என்பவர் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையிலும் தங்கன் மதன் வயது 38 மற்றும் முருகன் ரதீஸ்வரன் வயது 31. ஆகிய இருவரும் அடி காயங்களுக்கு இலக்கான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிசார் மேலதிக விசாரணை எடுத்துள்ளார்கள்.