Tue. May 21st, 2024

கொழும்பு கொண்டுசெல்லப்படவுள்ள யாழின் முதலாவது கோரோனோ நோயாளி

யாழில் கொரோனா தொற்றுக்கு இலக்கானதாக அடையாளம் காணப்பட்ட நபரை உடனடியாக கொழும்புக்கு கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா நோய்த் தொற்றுக்கு உட்பட்டுள்ளாரா என்ற சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் இன்று பிற்பகலில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்திருந்தனர்.

இதனை அடுத்து உடனடியாக கொழும்பு கொரோனோ தடுப்பு விசேட வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் சுவிஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்து சென்ற மதகுருவுடன் தனிப்பட்ட கலந்துரையாடல் ஒன்றில் பங்குகொண்டிருந்த நபர் ஒருவரே நோய்த் தொற்றுக்கு இலக்கானதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்திருந்தமை தெரிந்ததே.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்