Fri. May 17th, 2024

கொடிகாமத்தில் விற்பனைக்கு கொண்டு சென்ற 20 லிட்டர் கசிப்பு கைப்பற்றல்

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் பகுதியில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட 20 லீற்றர் கசிப்பு கொடிகாமம் பொலிசாரால் இன்று காலை 11 மணியளவில் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய பொலிசார் குறித்த நபரை கசிப்புடன் கைது செய்ய காத்திருந்த வேளை பொலிசாரை கண்டதும் கசிப்பை போட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.

விற்பனைக்காக 20 லீற்றர் கசிப்பை கொண்டு செல்லும் போது ஒருவரை பொலிசார் கைது செய்ய முற்பட்ட வேளை கசிப்பினை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு குறித்த நபர்  தப்பித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்