கொடிகாமத்தில் ஊரடங்கு வேளையில் தாக்குதல் சம்பவம், இருவர் காயம்
தென்மராட்சி கொடிகாமம் நகர் பகுதியில் ஊரடங்கு வேளையில் இன்று(31) மாலை 4.30 மணியளவில் தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது..
கொடிகாமம் மத்தியிலிருந்து கொட்டன் பொல்லுகளுடன் நடையில் வந்த 5 பேர் கொண்ட குழுவினர் கொடிகாமம் சந்தைக்கு அண்மையில் உள்ள வீடொன்றினுள் புகுந்து குடும்பத்தலைவருக்கும் அவருடைய மகனுக்கும் தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த தாக்குதலுக்கு இலக்காகியவர்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செல்லத்துரை லோகேஸ்வரன் வயது 45 லோகேஸ்வரன் மதுசன் வயது 20 ஆகியோரே காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இச்சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.