கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்ட பெண் கொலை!!
காட்டுநாயக்க – போருபன்விலவத பிரதான வீதியில் உள்ள வீடொன்றுக்கு அருகாமையில் பெண் ஒருவர் கூர்மையான ஆயதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனமல்வில- சூரியஹார பகுதியை சேர்ந்தவரே மேற்படிச் சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு சட்டவிராதமான விவகாரம் காரணமாக குறித்த பெண்ணை கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.