Sun. May 19th, 2024

குளிக்கச் சென்றவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

கிணற்றில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று புதன்கிழமை மாலை சாக்கோட்டை அல்வா வடமேற்கு பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் ராயப்பு அண்டனி தாஸ் வயது 54 என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனிமையில் வசித்து வந்த மேற்படி குடும்பஸ்தர் அருகில் உள்ள பொது கிணற்றில் குளிக்கச் சென்ற நிலையில் மரணமடைந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். சம்பவ இடத்துக்கு சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்த சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பருத்தித்துறை பொலிசாருக்கு உத்தரவிட்டார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்