குடவத்தை தேடுதலில் கைதான 2 பேருக்கு பிணை
20.11.2020 இன்று விடியற்காலை வடமராட்சி ஆட்டுப்பட்டி கொலனியில் நூற்றுக்கணக்கான ராணுவம் மற்றும் நெல்லியடி போலீசாரும் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர். தீபாவளி அன்று நடைபெற்ற அசம்பாவிதம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட பிடியாணை காரணமாக தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதில் நாலுபேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றும் வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. குடவத்தை 371 பிரிவு பகுதியில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் படி நெல்லியடி போலீசாரும் வல்லைப்பகுதி இராணுவத்தினரும் இணைந்து தேடுதல் நடத்தியுள்ளனர்.இதில் சிலர் தப்பியோடி உள்ளதாகவும் 4 பேர் கைது செய்துள்ளதுடன் உரிமை பத்திரம் இல்லாத மோட்டார் சைக்கிள் 4 கைப்பற்றபட்டது. நான்கு பேரில் இருவருக்கு பினை கொடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் இரண்டு மோட்டார் சைக்கிளும் திருப்பி வழங்கப்பட்டது என பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.