Sun. May 19th, 2024

குடத்தனை பகுதியில் வீட்டில் இருந்தவர்கள் மீது பொலிஸார் கண்மூடித்தனமான தாக்குதல்

வடமராட்சி கிழக்கு குடத்தனை- மாளிகைதிடல் அம்மன் கோவிலடி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த பொலிஸார் வீட்டிலிருந்தவர்கள் மீதும், அயல் வீட்டவர்கள் மீதும் நடாத்திய கொலைவெறி தாக்குதலில் 3 பேர் காயமடைந்து மந்திகை வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த சம்பவம் இன்று (1/4) காலை இடம் பெற்றிருக்கின்றது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று நுழைந்த பொலிஸார் கள்ள மண் ஏற்றியதாகவும், கன்ரர் வாகனத்தை எடுத்து செல்லப்போவதாக கூறியிருக்கின்றனர். இதனையடுத்து தாம் மணல் ஏற்றவில்லை. எனவும் வாகனத்தின் இயந்திரத்தில் சூடு இருக்கிறதா? என பார்க்குமாறு வீட்டிலிருந்த இளைஞர்கள் கூறிய நிலையில் விடாப்பிடியாக பொலிஸார் வாகனங்களை தாம் எடுத்து செல்லபோவதாக கூறினர்.

இதனையடுத்து பொலிஸாரின் அத்துமீறலை வீடியோ எடுத்துள்ளனர். இதனையடுத்து தொலைபேசியை பறித்து வைத்த பொலிஸார், கஞ்சாவை வைத்து வழக்கு போடுவோம் என அச்சுறுத்தியதுடன், வீடியோ வெளியே போககூடாது என அச்சுறுத்தியுள்ளனர். இதனையடுத்து இன்று காலை அதே வீட்டுக்கு சென்ற பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர், பெண்கள், ஆண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் என அனைவர் மீதும் மிருகத்தனமான தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

பெண் ஒருவரை காலால் மிதித்து அவர் மயங்கி விழும்வரை அடித்துள்ளனர். இந்நிலையில் 3 பேர் காயமடைந்து மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் இன்னும் பலர் காயமடைந்துள்ள போதும் அவர்கள் அச்சத்தினால் தமது வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது

 

 

 

 

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்