Fri. May 17th, 2024

கிளிநொச்சி நகரில் , 12.2 மில்லியன் ரூபாய் செலவில் நவீன பொது வசதிகள் மையம் திறந்து வைப்பு

கிளிநொச்சி நகரிற்கு, 12.2 மில்லியன் ரூபாய் செலவில் நவீன பொது வசதிகள் மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று (01) காலை 11 மணியளவில் இடம்பெற்றது.

உலக வங்கியின் நிதி உதவியுடன் நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குறித்த பொது வசதிகள் மையம், நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல், வீடமைப்பு வசதிகள் அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டு இன்று கரைச்சி பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சி சேவைச்சந்தையின் ஒரு பகுதியில் கனகபுரம் வீதியில் குறித்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பொது சேவையை பெற்றுக்கொள்ளும் வகையில் நவீன முறையில் குறித்த பொது வசதி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் பொது மலசலகூடம், பாலூட்டும் அறை, குளியளறை உள்ளடங்கலாக குறித்த பொது வசதிகள் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்