Sun. May 19th, 2024

கிணற்றில் தவறி விழுந்தவர் படுகாயம்

கிணற்றில் தவறி விழுந்த முதியவர் படுகாயம் வீதியால் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் வீதியின் அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.   நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி அளவில் புலோலி கிராமம் கோட்டு பல்லப்பை வீதிக்கு அருகாமையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் சிங்கைநகர் புலோலி தெற்கை சேர்ந்த முத்துலிங்கம் கண்ணன் என்பவரே  படுகாயமடைந்தவராவார். பருத்தித்துறை கிராம கோட்டி சந்தியில் இருந்து சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வீதிக்கு அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்து கால் முறிந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்