Fri. May 17th, 2024

கரப்பந்தாட்டத்தில் கோப்பாய் பிரதேச செயலக அணி சம்பியன்

யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான ஆண்களிற்கான வொலிபோல் போட்டியில் பலத்த போராட்டத்தில் கோப்பாய் பிரதேச செயலக அணி சம்பியனாகியது.
இதன் இறுதிக்கட்டம் நேற்று முன்தினம் (02.09.2020) புதன்கிழமை ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் கோப்பாய் பிரதேச செயலக அணியை எதிர்த்து சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணி மோதியது.
5செற்கள் கொண்ட போட்டியில் 1வது செற்றில் கோப்பாய் பிரதேச செயலக அணி 29:27 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற 2வது செற்றில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணி 28:26 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தனர். 3வது செற்றில் மீண்டும் கோப்பாய் பிரதேச செயலக அணி 25:23 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அதற்கும் தாம் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணி 26:24 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்டத்தை சமநிலைப்படுத்தினர். இதனால் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் 5வது செற் இரு அணிகளுக்கும் சவாலாக அமைந்தது.இதில் கோப்பாய் பிரதேச செயலக அணி 15:13 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியனாகியது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்